Thursday, September 12, 2013

கணபதியே!....

துதிக்கை உடையோனே
நின்னை நித்தமும்
துதி செய்து
மதி வேண்டி
திருவடி பணிந்தேனே.!

சினம் கொள்ளும்
சிறு மனங்களை
அகம் கொள்ளாது
அகம் காண அருள்
புரியும் நாயகனே
விநாயகனே !


இலக்கணமில்லா
இவ்வுல வாழ்க்கையின்
தலைக்கணம் அறுக்கும்
அதிபதியே
கணபதியே !

பரதம் பிடித்த உன் கைகளில்
உடைந்த தந்தம் போல்
இடையில் சிக்கிக்கொள்ள
பாதம் பிடித்தேனே
பாவங்கள்
தொலைத்தேனே  !!!!!!

----சுபசெந்தில்

No comments: